Friday, June 10, 2011

நட்பான உறவுகளே..



எல்லோரின் வாழ்க்கையிலும் எட்டிப்பார்க்கும் பருவ வயதின் பனிப்போர் "காதல்"..

சிலருக்கு அது இனிமை ,பலருக்கு அது கொடுமை ,இருந்தாலும் பலவிதமான பாடங்களை கற்பித்து செல்லும்..
 
என் வாழ்வில் இதுவரை அப்படி நடக்கவில்லை (அது நான் வளர்ந்த விதம்,இருப்பிடம்,நாடு ,குடும்பம்) எப்படி சொல்லுறது ?

அதைவிட என்னை பாதித்த சில சம்பவங்களாக கூட இருக்கலாம்.
நான் முதல் முதலாக என்ன எழுதலாம் (கிறுக்கலாம்) என்று நட்புகளிடம்
கேட்டேன், அவர்கள் சொன்னது "ஹ்ம்ம் உனக்கு பிடித்தது ,ரசித்தது ,பாதித்தது இப்படி எதாவது எழுதி "ஸ்டார்ட்" பண்ணு ஜெய் ,

(இது எனது முதல் கிறுக்கல்,யாரையும் மனம் புண்பட செய்யும் நோக்கம் இல்லை,நான் பார்த்த,கடந்து வந்த சில சம்பவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

நான் சிங்கையில் பிறந்து வளர்த்தவள்,தமிழ் எனக்கு இரண்டாம் மொழி .எனது தமிழில் பிழைகள் காணலாம், மன்னிக்கவும்.)
  

என்னை பாதித்த,சிந்திக்கவைத்த,சிரிக்கவைத்த,அழவைத்த ,ஆஹா சொல்லவைத்த சில சம்பவங்களை வரும் வாரங்களில் சொல்லபோகிறேன்.

No comments:

Post a Comment